பஞ்சாபை காப்பாற்றுங்கள் - சீக்கிய தலைமையை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக சுக்பீர் சிங் பாதல் குற்றச்சாட்டு
பஞ்சாப், 26 ஆகஸ்ட் (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் உள்ள குருத்வாராவுக்குள் ஆகஸ்ட் 13 அன்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது. முகட் கிராமத்தில் உள்ள குருத்வாரா மாதா சாஹிப் தேவாஜியில
Sukhbir Singh Badal alleges attempts to undermine Sikh leadership.


பஞ்சாப், 26 ஆகஸ்ட் (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் உள்ள குருத்வாராவுக்குள் ஆகஸ்ட் 13 அன்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது.

முகட் கிராமத்தில் உள்ள குருத்வாரா மாதா சாஹிப் தேவாஜியில் நடந்த இந்த தாக்குதலில், பாதலின் வலது முன்னங்கையில் நான்கு முதல் ஐந்து சென்டிமீட்டர் காயம் ஏற்பட்டது. அவரை பாதுகாக்க முயன்ற சிறப்பு பாதுகாப்பு பிரிவு காவலர் சந்தோஷ் கேலேவும் காயமடைந்தார்.

இசட்-பிளஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் இந்த தாக்குதல் நடந்ததால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுக்பீர் சிங் பாதல் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

பஞ்சாபை தங்கள் சொந்த வீடாக கருதாத சில சக்திகள், மாநிலத்தின் அமைதியை சீர்குலைப்பதற்காக உள்ளூர் மற்றும் சீக்கிய தலைமையை ஒழிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்திண்டாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாதல் கூறுகையில்,

நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், 'பஞ்சாபை காப்பாற்றுங்கள்'. பஞ்சாபை தங்கள் வீடாக கருதாத சக்திகள் சில உள்ளன; அவர்கள் பஞ்சாபில் உள்ள தலைமையை, சீக்கிய தலைமையை முடிக்க விரும்புகிறார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் பஞ்சாபில் அமைதியை சீர்குலைப்பதும், பிரச்சனைகளை ஏற்படுத்துவதும்தான். அவர்கள் மோசமான காலத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறார்கள்.

சிரோமணி அகாலி தளம் என்பது பஞ்சாபின் தியாகிகள், கால்சா பந்தின் ஜாத்தேபந்தி. இது 105 ஆண்டுகள் பழமையான ஜாத்தேபந்தி. கடந்த 105 ஆண்டுகளில் அது அநீதிக்கு எதிராகப் போராடியுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது. சுதந்திரத்திற்குப் பிறகு, விவசாயிகள், ஏழைகள், பஞ்சாப் மற்றும் பஞ்சாபியத் பிரச்சனைகளை எதிர்கொண்ட போதெல்லாம், அல்லது கால்சா பந்த் மீது தாக்குதல் நடந்த போதெல்லாம், அகாலி தள தலைமை தியாகம் செய்ய முன்வந்துள்ளது.

எனவே, கட்சியின் தலைவர் என்ற முறையில், பஞ்சாபில் நிலைமை மோசமடைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை கட்சித் தொண்டர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அமைதி மற்றும் சகோதரத்துவம், அனைத்து மதங்களுக்கும் மரியாதை மற்றும் பஞ்சாபின் செழிப்பு ஆகியவைதான் சிரோமணி அகாலி தளத்தின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b