Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் காலமானார்.
1938 மே 3 அன்று கேரளத்தில் பிறந்த வாழ்நாள் அர்ப்பணிப்பு பணியாளரான பாலகிருஷ்ணன், இன்று அதிகாலை 12.05 மணிக்கு இறுதி மூச்சை விட்டார்.
இது குறித்து,விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் மற்றும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
அவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது வாழ்க்கை ஒரு கர்மயோகியின் சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்த கேந்திரத்தை ஒரு 'உயிரோட்டமுள்ள நினைவுச் சின்னமாக' உருவாக்க வேண்டும் என்ற ஏக்நாத் ரானடேவின் கனவை நனவாக்கவும், பாரத மாதாவுக்கு சேவை செய்வதற்காகவும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
ஏக்நாத் ஜியின் அழைப்பால் ஈர்க்கப்பட்ட அவர், தனது பயிற்சியை நிறைவு செய்தார்,எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேந்திரத்தின் தகவலின்படி, அவர் 'உதய சூரியனின் பூமி' என்று அழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டார்.
அப்போது அந்த மாநிலம், 1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா போரின் தாக்கத்திலிருந்து மீண்டு கொண்டிருந்தது.
அங்கு அவர் கல்வியின் மூலம் அறிவைப் பரப்பியதுடன், விவேகானந்த கேந்திரத்தின் ஒரே நோக்கமான 'மனித வள மேம்பாடு மற்றும் தேச நிர்மாணம்' என்ற பணியை முன்னெடுத்துச் சென்றார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் கல்வித் துறையில் முன்னோடியான பணிகளை மேற்கொண்டதற்காக, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி மாநில அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அவருக்கு மாநில விருது வழங்கி கவுரவித்தது.
அவரது வாழ்க்கை ஒரு கர்மயோகியின் எடுத்துக்காட்டாகும். விவேகானந்த கேந்திரத்தை ஒரு 'உயிரோட்டமுள்ள நினைவுச் சின்னமாக' உருவாக்க வேண்டும் என்ற ஏக்நாத் ரானடேவின் கனவை நிறைவேற்றவும், பாரத மாதாவுக்கு சேவை செய்யவும் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
Hindusthan Samachar / Durai.J