ஆந்திராவில் பேருந்து - ஆட்டோ மோதி கோர விபத்து- 7 பேர் பலி, 2 பேர் படுகாயம்
பல்நாடு, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசம் பல்நாடு மாவட்டம் சிலகலூரிப்பேட்டை அருகே அட்டா சாலையில், விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து கொண்டா மஞ்
Horrific collision between bus and auto-rickshaw in Andhra Pradesh – 7 dead, 2 critically injured.


பல்நாடு, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசம் பல்நாடு மாவட்டம் சிலகலூரிப்பேட்டை அருகே அட்டா சாலையில், விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

இப்பேருந்து கொண்டா மஞ்சூருவில் இருந்து வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் காவல்துறையினர் மற்றும் 108 அவசர ஊர்தி பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆந்திரப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பயணங்கள் மக்களை அவர்கள் செல்ல வேண்டிய இலக்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், இறுதி இலக்கிற்கு அல்ல என்று கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அமைச்சர், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், விபத்து நடந்த இடத்தை உடனடியாக சீரமைத்து போக்குவரத்தை சீராக்குமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

இது போன்ற துயரங்களைத் தடுக்க சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b