Enter your Email Address to subscribe to our newsletters

ஈரான், 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது.
இந்த தாக்குதலில் கப்பலில் தீப்பிடித்ததாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் (UKMTO) இன்று அதிகாலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
UKMTO வெளியிட்ட ஆலோசனை குறிப்பின்படி, மர்ம ஏவுகணை தாக்கியதை அடுத்து கப்பலில் ஏற்பட்ட தீ பின்னர் முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது.
கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களின் இருப்பிடம் கணக்கிடப்பட்டு விட்டதாகவும், சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் மிக குறுகிய, ஆனால் மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். ஈரான் போர் பதற்றம் காரணமாக இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதலுக்கு இதுவரை எந்த தரப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
தற்போது அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு UKMTO அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b