Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
புகைப்படம், சமூகமும் உறவு முறையும்
என்ற தலைப்பில், சிக்மா போட்டோ இந்தியா மற்றும் பி.பி. போட்டோகிராபி இணைந்து உலக புகைப்பட தினத்தை சிறப்பாகக் கொண்டாடின.
புகைப்படக் கலை தொடர்பான அர்த்தமுள்ள அனுபவங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தும் புதிய கூட்டாண்மையின் முதல் நிகழ்ச்சியாக சென்னையில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புகைப்படக் கலைஞர்கள், கலைஞர்கள், புகைப்படத் துறை கல்வியாளர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புகைப்படத்தின் வளர்ந்து வரும் பங்கு மற்றும் வலுவான படைப்பாற்றல் சமூகங்களை உருவாக்குவதன் அவசியம் குறித்து நிகழ்வில் விரிவாகப் பேசப்பட்டது.
புகைப்பட கலைஞர் கலந்துரையாடல்
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஹரிஹரன் கோபால் தலைமையில் கலைஞர் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் அவர் தனது புகைப்படக் கலைப் பயணம் மற்றும் படைப்பு முறை குறித்து பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத புகைப்படக் கலைஞர் ரம்யா ஸ்ரீராம் அவரது புகைப்படப் பணிகள் குறித்தும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
மருத்துவ அவசரநிலை காரணமாக ரம்யா ஸ்ரீராம் நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலையில், அவருக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து,
“Beyond the Feed” – புகைப்படம், அல்காரிதம் மற்றும் AI
இதனைத் தொடர்ந்து
“Beyond the Feed: Photography in the Age of Algorithms & AI” என்ற தலைப்பில் சிறப்பு குழு விவாதம் நடைபெற்றது.
பின்னர் இந்த விவாதத்தில் ஆர். பிரசன்னா வெங்கடேஷ், அனிதா சாத்தியம் மற்றும் நவீன்ராஜ் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரியா பானிக் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, விவாதத்தை வழிநடத்தினார்.
சமூக ஊடகங்களின் அல்காரிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அதிகம் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய காட்சிக் கலாச்சாரத்தில், புகைப்படக் கலைஞர்கள் எவ்வாறு தங்களது தனித்துவத்தையும் உண்மைத்தன்மையையும் பாதுகாத்து அர்த்தமுள்ள படைப்புகளை உருவாக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து,பி.பி. போட்டோகிராபியின் நிறுவனர் பிரியா பானிக் கூறுகையில்:
புகைப்படம் என்பது ஒரு படத்தை உருவாக்குவதைக் காட்டிலும் பெரியது.
அது மனிதர்களையும், கருத்துகளையும், கதைகளையும் இணைக்கும் ஒரு வழியாக இருக்க வேண்டும்.
புகைப்படக் கலைஞர்கள் கற்றுக்கொள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடவும், தங்களது படைப்புகளை வெளிப்படுத்தவும் ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கம்.
ஆண்டு முழுவதும் தொடரும் நிகழ்ச்சிகள்
இந்த உலக புகைப்பட தினக் கொண்டாட்டம், சிக்மா போட்டோ இந்தியாவுக்காக பி.பி. போட்டோகிராபி ஒருங்கிணைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான தொடக்கமாக அமைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக புகைப்பட கலைஞர் கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள், பயிலரங்குகள், போட்டோ வாக் நிகழ்ச்சிகள், சமூக அடிப்படையிலான புகைப்பட அனுபவங்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்களது படைப்புகளை வெளிப்படுத்தவும், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளவும் வாய்ப்புகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளன.
இந்தக் கூட்டாண்மையின் மூலம் இந்தியாவில் புகைப்படக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் வலுவான சூழலை உருவாக்குவதே நோக்கமாகும்.
கற்றல், உரையாடல், புதிய முயற்சிகள் மற்றும் படைப்பாற்றல் பரிமாற்றத்திற்கான அனைவருக்கும் அணுகக்கூடிய தளங்களை உருவாக்குவதன் மூலம் புகைப்படத் துறையை மேலும் வளப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சொந்தம் உணரும் சட்டகங்கள்
( Frames of Belonging) என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் பல கதைகள், உரையாடல்கள் மற்றும் புதிய இணைப்புகள் தொடர்ந்து உருவாக உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
Hindusthan Samachar / M.DEEPAK RAJA