பந்திபோரா கலூசாவில் இருந்து 108 பக்தர்களுடன் சோட்டா அமர்நாத் யாத்திரை தொடக்கம்
ஜம்மு காஷ்மீர், 28 ஆகஸ்ட் (ஹி.ச.) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தின் கலூசாவில் இருந்து வருடாந்திர சோட்டா அமர்நாத் யாத்திரை இன்று (28) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதி
Chota Amarnath Yatra begins


ஜம்மு காஷ்மீர், 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தின் கலூசாவில் இருந்து வருடாந்திர சோட்டா அமர்நாத் யாத்திரை இன்று (28) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 108 பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

பந்திபோரா கூடுதல் துணை ஆணையர் சஃபர் ஹுசைன் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஐஜாஸ் ஜர்கர் ஆகியோர் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

யாத்திரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் நிர்வாகமும் பாதுகாப்பு அமைப்புகளும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தன.

சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த புனித யாத்திரை கலூசாவில் இருந்து தொடங்கி ஆரின் தர்த்போரா வழியாக செல்கிறது.

அங்கிருந்து பக்தர்கள் ஷம்தான் வழியாக மலையேறி, ஆரின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சோட்டா அமர்நாத் குகையை அடைவர்.

இந்த யாத்திரையில் உள்ளூர் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறைகள், தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து யாத்திரையின் போது பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் இதர அத்தியாவசிய சேவைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

யாத்திரை முழுவதும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பல்வேறு துறைகளுடன் இணைந்து முன்கூட்டியே செய்து முடிக்கப்பட்டதாக கூடுதல் துணை ஆணையர் சஃபர் அகமது தெரிவித்தார்.

கொடியசைப்பு விழாவில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வருடாந்திர யாத்திரை ஒரு ஆன்மீகப் பயணமாக மட்டுமல்லாமல், காஷ்மீரின் மத நல்லிணக்க மரபின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

இந்த யாத்திரை பிராந்தியத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் என அமைப்பாளர்களும் பங்கேற்பாளர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b