சட்டமன்றத்தில் துறை அமைச்சர்களே விளக்கம் அளிக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் போது, பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு மற்ற அமைச்சர்கள் பதிலளிக்க முற்பட்டதால் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து தலையிட்ட சபாநாயகர் ஜே. சி. டி.
Department ministers themselves must provide explanations


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின் போது, பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகளுக்கு மற்ற அமைச்சர்கள் பதிலளிக்க முற்பட்டதால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து தலையிட்ட சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர், அவையின் மாண்பையும், மரபையும் காக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

ஒவ்வொரு துறைக்கும் என தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தந்த துறை சார்ந்த கொள்கை முடிவுகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான விவரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் மட்டுமே இருக்கும்.

எனவே, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய முறையில், தெளிவாக பதிலளிக்கும் பொறுப்பு அந்தந்த துறை அமைச்சர்களுக்கே உள்ளது.

அவர்கள் அளிக்கும் விளக்கமே அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக கருதப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இனிவரும் காலங்களில், எந்தவொரு துறை சார்ந்த விவாதத்தின் போதும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பதிலளிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், மற்றவர்கள் குறுக்கிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் சட்டப்பேரவை விவாதங்கள் மேலும் ஆக்கப்பூர்வமாகவும், பொருள் பொதிந்ததாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b