சென்னை மழைநீர் வடிகால்களை தூர்வார போதிய நிதி ஒதுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தல்
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகரில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டியது அவசியம் என்று சட்டமன்றத்தில் இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில்
Former Minister Sekar Babu urges.


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகரில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டியது அவசியம் என்று சட்டமன்றத்தில் இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கூறுகையில்,

சென்னையில் பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும் மழைநீர் வடிகால் அமைப்புகளைத் தூர்வாரும் பணிகள்மிகவும் அவசியமானவை ஆகும்.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால்களுடன் கழிவுநீர் இணைக்கப்படுவதால் எளிதில் அடைப்பு ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சாலைகளில் ஆங்காங்கே தேங்கும் அடைப்புகளை முழுமையாக நீக்கி, மழைநீர் தடங்கலின்றி நீர்நிலைகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய கூடுதல் நிதி மற்றும் நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு தேவை.

எனவே சென்னையில் பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மாநகர் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் மணல் படிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்

இந்த தூர்வாரும் பணிகளுக்காக அரசு போதிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து, சென்னை மக்களை வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்

என்று அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / vidya.b