தமிழக சட்டப்பேரவையில் இன்று உள்துறை உட்பட 3 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம்
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் இன்று மிக முக்கியமான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் வசம் உள்ள உள்துறை, காவல் மற்றும் தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இத
Home Department


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் இன்று மிக முக்கியமான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் வசம் உள்ள உள்துறை, காவல் மற்றும் தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது.

இதனுடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதும் இன்று விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதி குறித்த மானியக் கோரிக்கை விவாதம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய விவாதம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்துறை என்பது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் மிக முக்கியமான துறை என்பதால் இந்த விவாதத்தின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் சமீபத்தில் அதிகரித்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், கொலை, கொள்ளை சம்பவங்கள் மற்றும் காவல் நிலையங்களில் நடைபெறுவதாக கூறப்படும் காவல் மரணங்கள், விசாரணைக் கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் இன்று சட்டப்பேரவையில் கடுமையான கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் அரசை கடுமையாக விமர்சிக்கவும், அரசுக்கு எதிராக அமளியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் தரப்பில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதற்கான புள்ளி விவரங்களுடன் விளக்கம் அளிக்கப்படும் என்றும், புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b