கருப்பு, சிவப்பு தான் ரத்தத்தில் ஓடுகிறது – உதயநிதி கைது குறித்து மாமன்றத்தில் மேயர் பிரியா பேச்சு
சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பான போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேயர் பிரியா பேசினார். அப்போது பேசிய அவர், மேகதாது அணைக்கு எதிர
Priya


சென்னை, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பான போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேயர் பிரியா பேசினார்.

அப்போது பேசிய அவர், மேகதாது அணைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஆட்சியாளர்கள் எதிர்ப்புடன் பார்த்ததாகவும், இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் வரை அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையாகி வந்த உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் போன்று அரசியல் செய்பவர் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாகவும் மேயர் பிரியா குறிப்பிட்டார்.

மேலும், “ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் கருப்பு, சிவப்பு தான் ரத்தத்தில் ஓடுகிறது” என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழகத்தின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என ஒரு கட்சியின் நிறுவனர் குறிப்பிட்டிருப்பதாகவும் மேயர் பிரியா தனது பேச்சில் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ