மாவீரர் தீரன் சின்னமலை புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் - முதல்வர் விஜய்
சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச) ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 3, 2026) அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவீரர் தீர
மாவீரர் தீரன் சின்னமலை புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் - முதல்வர் விஜய்


சென்னை, 03 ஆகஸ்ட் (ஹி.ச)

ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 3, 2026) அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b