Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
அசாம் மாநிலத்தில் உள்ள 31 சிறைகளில் கடந்த 4 மாதங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 226 கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில்,
சிறையில் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் சூழ்நிலைகள் குறித்து அரசு ஆய்வு செய்யும் என்றார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட 226 பேரில் சுமார் 95 சதவீதம் பேருக்கு ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்திய வரலாறு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பெரும்பாலானோருக்கு சிறைக்கு வருவதற்கு முன்பே தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 202 பேர் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (ART) பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் சிறைகளில் தொடர்ந்து எச்.ஐ.வி. பரிசோதனை, போதைப்பொருள் தடுப்பு மற்றும் கைதிகளுக்கான மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P