சனாதனக்கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்குத் திடீரென பெரியார் மீது கரிசனம் வந்துவிட்டது - வன்னி அரசு
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) சனாதனக்கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்குத் திடீரென பெரியார் மீது கரிசனம் வந்துவிட்டது என சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், சட்டப்பேரவையில் கடந்த 28.8.2026 அன்று சமூக நீதித்துறையின்
Vanniarasu


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

சனாதனக்கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்குத் திடீரென பெரியார் மீது கரிசனம் வந்துவிட்டது என

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்,

சட்டப்பேரவையில் கடந்த 28.8.2026 அன்று சமூக நீதித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு விடையளித்து நான் உரையாற்றியபோது,

திண்டிவனம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றிக்கு பாடாற்றிய திமுக உள்ளிட்ட தோழமை கட்சியினருக்கு நன்றி கூறினேன்.

அப்போது, நாங்கள் மட்டுமே நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம்; திமுக தரப்பலிருந்து நன்றி சொல்லவே இல்லை என்று சொன்னேன். அது ஒரு விளையாட்டாக சொன்னது தான். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டென எழுந்து பேசினார். எங்களுடைய தலைவருக்கும் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கும் இருப்பது தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது கொள்கை கூட்டணி.

என்னுடைய அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன் என முன்பும் சொன்னேன்.இப்போதும் சொல்கிறேன்” -என்றார். அப்படி அவர் மனம் திறந்து பேசியதற்கு உடனே நன்றி கூறினேன். இப்போதும் இலட்சக்கணக்கான சிறுத்தைகளின் சார்பில் அண்ணன் உதயநிதி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஆனால், பெரியாரை ஆசான் என சொல்லும் உதயநிதி, திருமாவளவனை ஆசான் என சொல்வதா? என சிலர் நஞ்சைக் கக்குகின்றனர்.

பெரியாருக்கு எதிராக RSS உள்ளிட்ட சனாதனக்கும்பலோடு கொஞ்சி குலவியவர்களுக்குத் திடீரென பெரியார் மீது கரிசனம் வந்துவிட்டது?

புரட்சியாளர் அம்பேத்கரைத் தன்னுடைய தலைவர் என்று போற்றியவர் தந்தை பெரியார். அவரைப் போல இன்று அண்ணன் உதயநிதி அவர்கள் எழுச்சித்தமிழரைத் தனது அரசியல் ஆசான் என வெளிப்படையாகப் பேசும் பக்குவத்தையும் துணிச்சலையும் பெற்றுள்ளார்.

பெரியாரைக் கன்னடர் என்று திராவிட இயக்கத்துக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் கும்பலோடு கைகோர்த்துக் கொண்டு பெரியார் மீது கரிசனம் காட்டுவது வியப்பாக உள்ளது.

விசிக இன்று தவெகவுடன் இணைந்து நின்றாலும் திராவிட இயக்கங்களுடன் உள்ள கொள்கை உறவு மாறாது என்பதைத் தான் அண்ணன் உதயநிதிஸ்டாலின் அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகிறது. இதனை ஏற்கவும் சகிக்கவும் இயலாதவர்கள் பொறுமை இழந்து புலம்புகின்றனர். இந்நிலையில் அய்யன் திருவள்ளுவர் சொல்லுவது தான் நினைவுக்கு வருகிறது.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடீன் பது.

(அழுக்காறாமை)

என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN