அண்ணாமலைக்கும் சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? - அமைச்சர் வன்னி அரசு
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) அண்ணாமலைக்கும் சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா எனசமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார், அதில், சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு, அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு
Minister Vanniarasu


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

அண்ணாமலைக்கும் சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா எனசமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்,

அதில், சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,

அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள்.

இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,

பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர். இப்போது அதையே சீமானும் வழிமொழிகிறார்.

சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ

அறிமுகமாவார்கள். வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன், நாயகிகளின் பெயர்களை மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.

சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.

ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.

சொத்துக்களை மறைப்பது போல

பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.

இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற சீமான் அவர்களுக்கும் தெரியும்.

ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற

#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?

மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய அண்ணாமலை அவர்களுக்கும் சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN