Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு: அண்ணாமலை கடும் கண்டனம்
முதலமைச்சர் விஜய் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறப்படும் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவு அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசுபொருளாகியுள்ளது.
அண்ணாமலை தனது பதிவில்,
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, 'இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?' என்று தோன்றியது. பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள அண்ணாமலை, அந்த பேச்சு அரசியல் நாகரிகத்திற்கும், பொது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மரியாதைக்கும் ஏற்றதல்ல என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த பதிவு வெளியானதும், சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதரப்பினர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் எதிர்வினைகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜயை விமர்சித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வெளியான கருத்தும், அதற்கு அண்ணாமலை அளித்த இந்த பதிலும் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ