Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
மூத்த குடிமக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான முதுமை மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் பல புதிய திட்டங்களை தமிழக அரசு 2026–27 நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது.
அதன்படி, முதியோருக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய 12 புதிய முதியோர் இல்லங்கள் முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் நிறுவப்பட உள்ளன.
தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தேவையான வசதிகளுடன் இயங்கும் இந்த இல்லங்களில், ஒவ்வொன்றிலும் 40 பயனாளிகள் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்காக ₹6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மூத்த குடிமக்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் வகையில், நூலகம், யோகா, தியான வகுப்புகள் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் அமைக்கப்படும்.
இந்த மாவட்டங்கள், மூத்த குடிமக்களின் மக்கள்தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ