Enter your Email Address to subscribe to our newsletters

இட்டாநகர் , 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் இன்று காலை 5.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சில நொடிகள் அச்சமடைந்தனர்.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்திற்கு முன்பாக, இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை லேசான நில அதிர்வுகள் பதிவாகின.
அதிகாலை 3.40 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 2.8, 3.55 மணிக்கு 3.2 மற்றும் காலை 4.34 மணிக்கு மீண்டும் 2.8 ஆக நில அதிர்வுகள் ஏற்பட்டன.
அதேபோல், காலை 5.45 மணிக்கு ஏற்பட்ட முக்கிய நிலநடுக்கத்துக்குப் பிறகு, காலை 7.17 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக மற்றொரு லேசான நிலநடுக்கமும் பதிவானது.
கிழக்கு இமயமலைப் பகுதியில் உள்ள சிக்கலான நிலப்பிளவு அமைப்புகள் காரணமாக, அருணாசல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA