பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர் பாலியல் புகாரில் கைது - மனைவி மீதும் வழக்கு
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது, தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்
Stock market expert P.R. Sundar arrested


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது, தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், வேலைக்காக பி.ஆர்.சுந்தரிடம் கேட்டிருந்ததாகவும், அதன் ரீதியில் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பி.ஆர்.சுந்தர் தனது வீட்டுக்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து அவரது மனைவியிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூன் 29ஆம் தேதி, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பி.ஆர்.சுந்தர் தனது அலுவலகத்திற்கு வரவழைத்ததாகவும், அங்கு ஓர் அறையில் 3 மணி நேரம் பூட்டி வைத்து பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த செய்தி வாசிப்பாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார், பிரபல தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் பி.ஆர் சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பி.ஆர். சுந்தர் பாலியல் தொல்லை புகாரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐஸ் ஹவுஸ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பி.ஆர். சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவரது மனைவி மீதும் போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b