வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) 2026-27-ஆம் ஆண்டுக்காண படஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த
MK Stalin


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

2026-27-ஆம் ஆண்டுக்காண படஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை சரியாக 9:30 மணிக்கு தொடங்கியது. சபாநாய்கர் ஜே.சிடி.பிரபாகர் வருகைக்கு பின்னர் வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தவெக அரசின் முதல் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் 2026.

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள்.

உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும்.

தீர்வு கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN