Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
கார்த்திகை விரதம் (கிருத்திகை விரதம்) என்பது தமிழ் கடவுளான முருகப்பெருமானை வழிபடுவதற்காக ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கிய விரதமாகும்.
இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் தீராத வினைகள் தீர்ந்து, வாழ்வில் மகிழ்ச்சியும், நினைத்த காரியங்களும் கைகூடும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.
காலை குளியல்: விரத நாளன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, தூய்மையான ஆடை அணிய வேண்டும்.
பூஜை அறை வழிபாடு: வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படத்திற்கு அல்லது சிலைக்கு மலர்கள் சூட்டி, தீபமேற்ற வேண்டும்.
உணவு முறை: கார்த்திகை விரதம் இருப்பவர்கள் பகல் முழுவதும் உணவருந்தாமல் இருப்பது சிறந்தது. உடல்நிலை காரணமாக முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் மட்டும் உட்கொள்ளலாம்.
மந்திர பாராயணம்: நாள் முழுவதும் ஓம் சரவணபவ அல்லது முருகா என்னும் திருநாமத்தை தியானிக்க வேண்டும்.
கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற முருகனின் பாடல்களைப் பாராயணம் செய்வது நற்பலன் தரும்.
கோவில் வழிபாடு: மாலையில் முருகப்பெருமான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது, தீபமேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது.
கோவில் வழிபாடு: மாலையில் முருகப்பெருமான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது, தீபமேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது.
விரதம் முடித்தல்: மாலையில் முருகனுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயாசம் படைத்து, பூஜித்த பின் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
விரதத்தின் நன்மைகள்:
வாழ்வில் ஏற்படும் தீராத வினைகள் மற்றும் தோஷங்கள் நீங்கும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.
நினைத்த காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும்.
முக்கிய கார்த்திகை விரதங்கள்:
மாதந்தோறும் வரும் கார்த்திகை தவிர, வருடத்தில் வரும் மூன்று கார்த்திகை விரதங்கள் மிக முக்கியமானவை.
ஆடிக் கிருத்திகை:
தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த பெரிய திருவிழாவாகும்.
தைக்கிருத்திகை:
உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் தை மாத கார்த்திகை நட்சத்திரம் சிறப்பானது.
கார்த்திகை தீபம்:
கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று சொக்கப்பனை கொளுத்தி, வீடு முழுவதும் விளக்கேற்றி கொண்டாடும் திருநாள்.
Hindusthan Samachar / Durai.J