Enter your Email Address to subscribe to our newsletters

பீகார் , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில், விபத்தில் காயமடைந்த இளைஞரின் உடைந்த காலுக்கு பிளாஸ்டர் அல்லது மருத்துவக் கட்டுக்குப் பதிலாக அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞர் பெகுசராய் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு முதலுதவியாக, உடைந்த காலை அசையாமல் வைத்திருக்க அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்டு, மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த சிவில் அறுவை சிகிச்சை மருத்துவர்,
நோயாளிக்கு உடனடி நிவாரணம் அளித்து, காலை நிலைநிறுத்தும் நோக்கில் தற்காலிகமாக அட்டைப்பெட்டியை பயன்படுத்தினோம்.
பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
எனினும், இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA