சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் - மௌன அஞ்சலி
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச) சட்டப்பேரவையில் இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரவை தொடங்கியதும், சபாநாயகர் மறைந்தவர்களுக்கான இரங்கல் குறிப்பை வாசித்தார். அதில
Condolence resolution in the Legislative Assembly


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச)

சட்டப்பேரவையில் இன்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேரவை தொடங்கியதும், சபாநாயகர் மறைந்தவர்களுக்கான இரங்கல் குறிப்பை வாசித்தார். அதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது பொது வாழ்வும், மக்கள் பணியும் நினைவு கூரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த பிரபல இயக்குநர் பாக்கியராஜ், சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளர் புவியரசு, பிரபல பின்னணிப் பாடகி ஜானகி மற்றும் எழுத்தாளர் பூமணி ஆகியோரின் மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அவர்கள் தங்கள் துறைகளில் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள் குறித்து இரங்கல் குறிப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இரங்கல் குறிப்பைத் தொடர்ந்து, மறைந்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b