Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 07 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது வாரத்தின் கடைசி நாளான எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நடவடிக்கைகள் மீண்டும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
அவையை சுமுகமாக நடத்துவதற்காக மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் மந்திரி கிரண் ரிஜிஜு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், அதன்பிறகும் அமளி நீடித்தது.
நேற்றும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, மக்களவையும் மாநிலங்களவையும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர்கள் அறிவித்தனர்.
இதற்கிடையே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.) மேம்பாட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA