உலகம் தடுமாறினாலும் இந்தியா வேகமாக முன்னேறுகிறது,ஜி.டி.பி. 7.8 சதவீதம் வளர்ச்சி-துணை முதல்வர் பவன் கல்யாண் பெருமிதம்
அமராவதி , 01 செப்டம்பர் (ஹி.ச.) உலகம் பல்வேறு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா தனது பொருளாதார வலிமையை நிரூபித்து தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளா
A


அமராவதி , 01 செப்டம்பர் (ஹி.ச.)

உலகம் பல்வேறு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா தனது பொருளாதார வலிமையை நிரூபித்து தொடர்ந்து முன்னேறி வருவதாக ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

2026–27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இது இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், நாட்டின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக பவன் கல்யாண் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,:

உலகின் பல்வேறு பகுதிகளில் போர்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நிச்சயமற்ற சூழ்நிலையிலும் இந்தியா தனது பொருளாதார வலிமையை நிலைநாட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜி.டி.பி. வளர்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல என்றும், அது நாட்டின் மக்களின் கூட்டு உழைப்பு மற்றும் திறனை பிரதிபலிப்பதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

மோடி தலைமையில் முன்னேற்றம்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சவால்களை வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிறைவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் பல்வேறு நிச்சயமற்ற சூழ்நிலைகள் நீடித்தாலும், இந்தியா வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும், உலக அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மையும் முக்கியத்துவமும் அதிகரித்து வருவதாகவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

வலிமையான, தன்னிறைவு பெற்ற, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நாடாக இந்தியாவை உருவாக்கும் ‘விக்சித் பாரத்’ இலக்கை நோக்கி நாடு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA