Enter your Email Address to subscribe to our newsletters

தென் கொரியா, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கின் தலைமை கொள்கை ஆலோசகர் ராஜினாமா செய்துள்ளதாக அதிபர் மாளிகையான புளூ ஹவுஸ் இன்று தெரிவித்துள்ளது. அதிபரின் ஆதரவு மதிப்பீடு சரிவைக் கண்டதை அடுத்து, அவர் தனது அமைச்சரவை மற்றும் மூத்த ஆலோசகர்களை மாற்றியமைத்தார். அதனை தொடர்ந்து இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
வீட்டுவசதி மற்றும் பங்குச் சந்தை விவகாரங்கள் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளில் அதிபர் லீ-க்கு முக்கிய ஆலோசகராக இருந்தவர் கிம் யோங்-பியோம். அவரது ராஜினாமாவை அதிபர் லீ இன்று ஏற்றுக்கொண்டதாக அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சர், நிலத்துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு புதிய அமைச்சர்களையும், புதிய அதிபர் அலுவலக உதவியாளர்களையும் லீ-யின் அலுவலகம் நியமித்திருந்தது.
மேலும் கடந்த ஆகஸ்ட் இறுதியில் புதிய வர்த்தக அமைச்சரையும் லீ நியமித்திருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றதிலிருந்து முதல் முறையாக, லீ-யின் ஆதரவு மதிப்பீடு 1.3 சதவீத புள்ளிகள் சரிந்து 38.9 சதவீதமாக குறைந்துள்ளதாக நேற்று வெளியான ரியல்மீட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
வீட்டு விலைகள் மற்றும் வாடகை செலவுகள் குறித்த கவலைகள் பொதுமக்களின் மனநிலையை பாதித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b