Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் (தனி) தொகுதி:
கணிதா சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர்.
தாராபுரம் (தனி) தொகுதி:
கே. பானுமதி, பி.ஏ., திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு முன்னாள் உறுப்பினர்.
அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, இரு தொகுதிகளிலும் மேற்கண்டவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு நிறுத்தப்படுவதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ