மதுராந்தகம் இடைத்தேர்தல் - எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் பிரச்சாரம் தொடக்கம்
மதுராந்தகம், 11 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணிதா சம்பத், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து
Kani


மதுராந்தகம், 11 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணிதா சம்பத், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணிதா சம்பத், மாமண்டூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

மாமண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு கணிதா சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியையும் தொடங்கினார். தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தனபால் ஆகியோரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் மாமண்டூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது தேர்தல் களத்தில் சூடுபிடித்துள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ