பா.ஜ.க- வில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.க-வில் இணைந்தவர்களை வரவேற்ற நயினார் நாகேந்திரன்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை வீ தி லீடர்ஸ் (We The Leaders)என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அந்த அமைப்பில் லட்சக்கணக்கான மக்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். பாஜகவைச் சேர்ந்த பலரும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து,
BJP


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை வீ தி லீடர்ஸ்

(We The Leaders)என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அந்த அமைப்பில் லட்சக்கணக்கான மக்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பாஜகவைச் சேர்ந்த பலரும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து, அவரது அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் அந்த அமைப்பில் இருந்து விலகி ஒரு சிலர் மீண்டும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

அது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்,

பாஜகவிற்கு மீண்டும் வரவேற்கிறோம்!

திருநெல்வேலி மாவட்ட பாஜகவிலிருந்து முன்னதாக “WE THE LEADERS” அமைப்பிற்கு சென்ற சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் B.S. அஸ்வின் அவர்கள், சேரன்மகாதேவி ஒன்றிய பொதுச் செயலாளர் திரு. உச்சிமாளி அவர்கள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் V. நிவேதா

அஸ்வின் அவர்கள், சேரன்மகாதேவி முன்னாள் ஒன்றிய தலைவர் சின்ன முருகன் அவர்கள் மீண்டும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அவர்களை அன்புடன் வரவேற்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், தொடர்ந்து மக்கள் சேவையிலும், மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் காரியகர்த்தா தயா சங்கர் அவர்கள் உடன் இருந்தார் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN