Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 12 செப்டம்பர் (ஹி.ச)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 9 ஆண்டுகளாக முறையான பேருந்து வசதி இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய முதியவர்கள் தினம்தோறும் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிருக்கு போராடும் நிலை ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கடந்த 9 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடமும், போக்குவரத்து துறை அதிகாரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b