Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
தொழில்துறை அமைச்சர் கூட இல்லாமல் முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தொழில்துறை அமைச்சரையே உடன் அழைத்துச் செல்லாமல் முதல்வர் தனியாக சென்றிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தான் தமிழகத்தில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு பெரிய தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் கொண்டு வந்ததாகவும் நயினார் நாகேந்திரன் இந்த பேட்டியின் போது நினைவு கூர்ந்தார்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே இடைத்தேர்தல் வருவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்றும் அவர் சாடினார். இது முழுக்க முழுக்க குதிரை பேரத்திற்காக நடத்தப்படும் அரசியல் நாடகம் என்று குற்றம் சாட்டிய அவர், மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b