அரசியல் என்ற பெயரில் பெண்கள் அவமதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது – ஜோதிமணி கண்டனம்
சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.) அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி, ஒருவரை அரசியல் ரீத
Jothimani


Bb


சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி,

ஒருவரை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கும், அவர்களின் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளை வலுவாக முன்வைப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசியல் விமர்சனம் என்ற எல்லையைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் ஒருவரின் பிறப்பை கேள்விக்கு உள்ளாக்குவது அநாகரிகமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடர்பாக ஆ.ராசா தெரிவித்த கருத்து தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறியுள்ள ஜோதிமணி, இதுபோன்ற மலிவான விமர்சனங்களில் அவமதிக்கப்படுவதும் ஒரு பெண்ணாகவே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்கள்தான் அரசியலில் எளிதான இலக்காக தொடர்ந்து பார்க்கப்படுவதாகவும், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான தனிப்பட்ட விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் ஒருவரின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிக்கலாம் என்றும், அதேநேரத்தில் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பிறப்பை மையப்படுத்தி அவமதிப்பது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அரசியல் என்ற பெயரில் தொடர்ந்து பெண்கள் அவமதிக்கப்படுவது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜோதிமணி, அரசியல் விமர்சனங்கள் கண்ணியத்துடனும், தனிநபர் மரியாதையை கருத்தில் கொண்டும் இருக்க வேண்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ