Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 13 செப்டம்பர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதீஷ் பூனியா, பஞ்சாபில் நிலவும் போதைப்பொருள் நெருக்கடியை சுட்டிக்காட்டி, போதைப்பழக்கம் மாநில இளைஞர்களை சீரழித்துவிட்டதாகவும், இது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சதீஷ் பூனியா கூறுகையில்,
பஞ்சாப் ஒரு காலத்தில் நாட்டின் பெருமையாக திகழ்ந்தது. அதன் விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கலாச்சாரம் நாடு முழுவதும் புகழ்பெற்று விளங்கியது. ஆனால் இன்றைய நிலைமை என்னவென்றால், போதைப்பொருள் துஷ்பிரயோகம் அதன் இளைஞர்களை சீரழித்துவிட்டது.
போதைப்பொருள் பரவல் குறிப்பிடத்தக்க சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது. ஆம் ஆத்மி அரசின் கீழ் நிலவும் ஊழலை கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய பிரச்சனையாகும். போதைப்பொருள் துஷ்பிரயோகம் சட்டம் ஒழுங்கு சவால்களை உருவாக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பரவலான ஊழல் மற்றொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
பஞ்சாப் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்சினைகள் என்று அவர் குறிப்பிடுவதை பாஜக எதிர்கொண்டு வருகின்றது. போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை பாஜக கட்சி நடத்தி வருகின்றது.
ராஜஸ்தானைப் பொறுத்தவரை, வரவிருக்கும் நகராட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அம்மாநில வாக்காளர்கள் டிரிபிள் என்ஜின் அரசாங்கத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த நகராட்சி அமைப்புகளில் பாஜக வலுவான பெரும்பான்மையைப் பெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தானில் நகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், பூனியாவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன.
Hindusthan Samachar / vidya.b