தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம்,நேற்று இரவு திட்டமிடப்படாத மின் தடை இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்நாடு, 13 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு திட்டமிடப்படாத மின் தடை எதுவும் ஏற்படவில்லை என்பதை மின்வாரியம் உறுதி செய்துள்ளது என அமைச்சர் நிர்மல
நிர்மல் குமார்


தமிழ்நாடு, 13 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு திட்டமிடப்படாத மின் தடை எதுவும் ஏற்படவில்லை என்பதை மின்வாரியம் உறுதி செய்துள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது.

மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவைமையத்தை 94987 94987 என்ற எண்ணில்தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும்பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam