Enter your Email Address to subscribe to our newsletters

புர்ஜா, 13 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் புர்ஜா அருகே மணபுரம் வழித்தடத்தில் இன்று காலை வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது எதிரே வந்த லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொப்பிலி துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். கோவிந்தராவ் கூறுகையில்,
மணபுரம் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிவித்தார். மோதலின் வேகத்தில் ஆட்டோ முற்றிலும் நொறுங்கியதில் அதில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் விபத்துக்கான சரியான காரணம் குறித்தும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதிவேகமாக வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்து நடந்த விதம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b