விநாயகர் அருளால் அனைவரது எண்ணங்களும் நிறைவேறட்டும் - தமிழக மக்களுக்கு அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, தமிழக மக்கள் அனைவருக்கும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்கள்
Annamalai


Hg


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, தமிழக மக்கள் அனைவருக்கும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரும் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேற வேண்டும் என அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் வளமும், நலமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்களில் அன்பும், அமைதியும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் எனவும், விநாயகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக மக்களுக்கு அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தி இடம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ