Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 14 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் திரையும் இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி சினிமா திரையுமான, 14வது எபிக் திரையுடன் அறிமுகமாகியது.
மேம்பட்ட படம் மற்றும் ஒலி தொழில்நுட்பங்களுடன் இந்ததிரை அமைகிறது.
எபிக் லக்ஸ்ஆன் ஒரு ஒலி ஊடுருவும் எல்இடி திரையாகும். இந்தத் தொழில்நுட்பம் ஒலியைத் திரையின் வழியே கடந்து செல்ல அனுமதிக்கிறது, இதன் மூலம் உயர்தரமான, பார்வையாளர்களை உள்ளிழுக்கும் ஒலி அனுபவத்திற்குத் தேவையானவாறு, ஒலிபெருக்கிகளைத் திரையின் பின்னால் வைக்க முடிகிறது.
இந்த அறிமுகம் தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் ஆகும்.
இதுகுறித்து,
கற்பகம் குழும திரையரங்கு இயக்குநர் சிவபிரகாசம் பேசும் போது,
கற்பகத்தில், பார்வையாளர்களுக்கு திரைப்படம் பார்ப்பதற்கான ஓர் இடத்தை மட்டும் வழங்காமல், ஒவ்வொரு வருகையும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவமாக அமைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்து வருகிறது.
கற்பகம் கிராண்ட்பிளக்ஸில் எபிக் மற்றும் எபிக் லக்ஸ்ஆன் அறிமுகப்படுத்தப்படுவது அந்த திசையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
மேம்பட்ட காட்சி தொழில்நுட்பங்கள் மற்றும் ஒலி ஊடுருவக்கூடிய எல்இடி திரை முதல், டால்பி அட்மாஸடன் கூடிய மேக் ஆடியோ மற்றும் கவனமாக வடிவமைக்கப்பட்ட முற்றிலும் கருப்பு நிற உட்புறங்கள் வரை, அனுபவத்தை மேலும் ஆழமானதாக மாற்றுவதற்காக ஒவ்வொரு அம்சமும் கருத்தில் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J