விநாயகர் அருள் அனைவருக்கும் அறிவும் அமைதியும் வெற்றியும் தரட்டும் - தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் அர்லேகர் வாழ்த்து
சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்
Arlekar


Bb


சென்னை, 14 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தடைகளை நீக்கி, ஞானம் மற்றும் வளத்தின் திருவுருவமாக விளங்கும் விநாயகப் பெருமான், அனைவருக்கும் அறிவு, அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை அருள வேண்டும் என ஆளுநர் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், விநாயகர் சதுர்த்தி திருநாள் நமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வளமான மற்றும் முன்னேறிய தமிழ்நாட்டையும், வளர்ச்சியடைந்த பாரதத்தையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும் என வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ