Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்திருநாளில் தொடங்கப்படும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற வேண்டும் என்றும், மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கைகள் மலர வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருக வேண்டும் என்றும், மக்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறி, அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P