Enter your Email Address to subscribe to our newsletters

மத்திய பிரதேசம், 14 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மஹாகலேஷ்வர் கோவிலில் பாபா மஹாகாலுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, பாபா மஹாகால் விநாயகர் வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டார். மேலும், சுவாமிக்கு வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மஹாகாலேஷ்வர் கோவிலில் நடைபெறும் பாரம்பரியமான பாஸ்மா ஆரத்தியும் பக்தர்களின் ஆன்மிக உணர்வை அதிகரிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை நடைபெற்ற இந்த ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபா மஹாகாலின் அருளைப் பெற்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் வடிவில் காட்சியளித்த பாபா மஹாகாலின் அலங்காரம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கோவில் முழுவதும் பக்தி முழக்கங்கள் ஒலிக்க, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடுகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
Hindusthan Samachar / Durai.J