Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
மகாராஷ்டிர மாநிலத்தில் பத்து நாள் கணேஷோத்சவ விழாவின் சிறப்பு நிகழ்வாக இன்று காலை மும்பையின் லால்பாக்சா ராஜா பந்தலில் ஏராளமான பக்தர்கள் கூடி விநாயகப் பெருமானை வழிபட்டு ஆசி பெற்றனர்.
மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரசித்தி பெற்ற பந்தலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
'கணபதி பப்பா மோர்யா' என்ற பக்தி முழக்கம் பந்தல் முழுவதும் எதிரொலித்த நிலையில், பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வழிபாடுகளை நடத்தினர்.
இதற்கிடையே, புனேவில் உள்ள ஸ்ரீமந்த் தக்துஷேத் கணபதி மண்டலில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கணபதி அதர்வசீர்ஷ பிரார்த்தனையை பாராயணம் செய்தனர்.
இதே போல் ஹைதராபாத்தில், விழா கொண்டாட்டங்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பிராந்திய பழக்கவழக்கங்களை ஒருங்கிணைத்து நடைபெற்றன.
லால் தர்வாசாவில், ஃபியூச்சர் பவுண்டேஷன் சொசைட்டி சார்பில் வராஹி தேவியின் மடியில் வீற்றிருக்கும் விநாயகரின் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலை நிறுவப்பட்டது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் கணேஷோத்சவ கொண்டாட்டங்கள் ஆழ்ந்த பக்தியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பெரும் பொதுக்கூட்டங்கள், உற்சாகமான ஆரத்தி நிகழ்ச்சிகள் மற்றும் கலைநயமிக்க பந்தல் அலங்காரங்கள் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b