மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு
சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்த இரு தொகுதிகளு
Maduranthakam and Dharapuram by-elections – Nomination filing ends today.


சென்னை, 16 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவித்தது. அதன்படி வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி இன்று செப்டம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைவதைத் தொடர்ந்து நாளை செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. பரிசீலனையின் போது தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகுதியற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும். இதனைத் தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு செப்டம்பர் 19-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் இரு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதனால் இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b