இங்கிலாந்து பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு ஈர்ப்பு தமிழகத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் விஜய்யால் மேற்கொள்ளப்பட்ட இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15 ஆயிரத்து 300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதலீடுக
இங்கிலாந்து பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு ஈர்ப்பு : தமிழகத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழ்நாடு அரசு தகவல்


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் விஜய்யால் மேற்கொள்ளப்பட்ட இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15 ஆயிரத்து 300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழக அரசுக் குழுவினர் இங்கிலாந்து சென்றிருந்தனர்.

இந்த பயணத்தின் போது, ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தமிழக அரசின் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான வழிகாட்டி நிறுவனத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த பயணத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, பிரபல நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது அணியினர் பங்கேற்ற புகழ்பெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தையும் தமிழக அரசுக் குழுவினர் தொடங்கி வைத்தனர். இது தமிழகத்தின் விளையாட்டு மற்றும் தொழில்துறை ஆர்வத்தை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் தமிழகத்தில் சுமார் 10,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்த முதலீடுகள் குவிய உள்ளன.

மேலும், இங்கிலாந்தில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களை முதல்வர் நேரில் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இதன் காரணமாக தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b