சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இன்று உறுதியேற்போம் - முதலமைச்சர் விஜய்
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக, திமுக, அதிமுக என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர் வாழ்த்து தெரிவித்து உறுதிமொழி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தவெக த
CM Joseph Vijay


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக, திமுக, அதிமுக என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர் வாழ்த்து தெரிவித்து உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தவெக தலைவருமான ச. ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளத்தில்,

சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!

வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN