Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையும், நாட்டின் சேவைக்கான அர்ப்பணிப்பும், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் தேசிய இலக்குக்கு புதிய உத்வேகத்தை அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சியடைந்த, வளமான, தற்சார்பு மற்றும் உலகளவில் வலிமைமிக்க பாரதத்தை உருவாக்கும் பயணத்தில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் அவசியம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடிக்கு நல்ல உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளை இறைவன் வழங்க வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தை சிறப்பாக வழிநடத்த அவருக்கு வலிமையும் ஞானமும் அளிக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாக ஆளுநர் அர்லேகர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P