Enter your Email Address to subscribe to our newsletters

உஜ்ஜைன், 18 செப்டம்பர் (ஹி.ச)
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் இன்று காலை நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த திருத்தலத்தில் அவர் பிரார்த்தனை செய்தார்.
மகாகாலேஸ்வரர் கோயில் இந்தியாவின் மிகவும் புனிதமான சிவ தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வருகை தருகின்றனர்.
இங்கு நடைபெறும் பஸ்ம ஆரத்தி பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வாக திகழ்கிறது.
வழிபாட்டிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபின்,
பாஜக கட்சியின் தலைவரான பிறகு இக்கோயிலுக்கு வருவது இதுவே முதல் முறை.
இன்று நாடு முழுவதற்காகவும், ஒட்டுமொத்த இந்தியாவிற்காகவும் நாங்கள் அனைவரும் மகாகாலிடம் அனைவரின் நலனுக்காகவும் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்தோம். அத்துடன் அவரது ஆசியையும் பெற்றுள்ளோம்.
இந்த புனித மண்ணிலிருந்து அனைத்து மக்களுக்கும் புகழும் பெருமையும் கிடைக்கட்டும். இன்று மத்தியப் பிரதேசத்திற்கு வந்த பிறகு, மகாகாலின் ஆசியைப் பெறாமல் யாரும் இந்த நகரை விட்டுச் செல்வதில்லை. தலைவரான பிறகு முதல் முறையாக மகாகாலை தரிசிக்கும் பாக்கியம் இன்று எனக்கும் கிடைத்தது.
நேற்று நமது மாண்புமிகு பிரதமரின் பிறந்தநாளை சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் கொண்டாடியதைப் போல, நாட்டின் வளர்ச்சியை இன்னும் அதிக வெற்றியுடனும் சாதனையுடனும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல மகாகால் அவருக்கு ஆசி வழங்க வேண்டும் என்று நம்புகிறேன்
என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b