த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12-க்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலு
Governer


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலான மசோதாக்களுக்கு குறுகிய காலத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 6 மசோதாக்களுக்கு 4 நாட்களுக்குள் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 5 மசோதாக்களுக்கு 5 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 11 மசோதாக்களுக்கு 5 நாட்களுக்குள் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதனிடையே, தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.

இதனால், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மொத்தம் 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ