Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 18 செப்டம்பர் (ஹி.ச)
சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் இன்று நடைபெற்ற 'ஸ்வச் சாகர், சுரக்ஷித் சாகர்' கடலோர தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சர்வதேச கடலோர தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா 2021-22 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்வை அனுசரிக்கத் தொடங்கியது. இந்தியாவின் கடற்கரை சுமார் 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது. சுமார் 12 முதல் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடற்கரையோரம் அமைந்துள்ளன.
நாட்டின் கடற்கரைகளின் தூய்மையைப் பேணுவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்து முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
பிரதமர் மோடி ஆழ்கடல் திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் கீழ், ஆராய்ச்சியுடன், கடலுக்கு அடியில் மறைந்துள்ள உலோகங்கள், கனிமங்கள் மற்றும் மருந்துகளை ஆராய்ந்து, அவற்றை மனிதகுல நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளோம்.
கடல் வளங்களை மனிதகுல நன்மைக்காக பயன்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அறிவியல் ஆராய்ச்சி துணைபுரிகிறது. ஆரோக்கியமான கடல் நீர் மற்றும் கடற்கரைகளை பராமரிக்க பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.
இந்த பிரச்சாரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இன்று கூட பல பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களும் எங்களுடன் இணைந்ததை நீங்கள் பார்த்தீர்கள், இந்த வகையில் இது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
நாளை சனிக்கிழமை, சர்வதேச கடலோர தூய்மை தினம். சர்வதேச கடலோர தூய்மை தினத்திற்கு முந்தைய நாளான இன்று நாம் இங்கு ஜுஹு கடற்கரையில் ஒன்று கூடியுள்ளோம்.
என்று கூறி அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / vidya.b