செப்டம்பர் 15-ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா - விருதாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திராவிட முன்னேற்றக்
செப்டம்பர் 15-ஆம் தேதி திமுகவின்  முப்பெரும் விழா - விருதாளர்கள் பட்டியல் வெளியீடு


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது.

இந்த விழாவில் கழகத்திற்காகவும், தமிழ் சமுதாயத்திற்காகவும் அரும்பணியாற்றியவர்களுக்கு தலைவர்கள் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு முப்பெரும் விழாவையொட்டி விருதுகள் பெறுவோரின் பட்டியலை திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி தந்தை பெரியார் விருது செல்லப்பா அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா விருது சேலத்தைச் சேர்ந்த ஜி.கே. சுபாஷ் அவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா அவர்களுக்கு கலைஞர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் விருது கவிஞர் கனிமொழி என்.வி.என். சோமு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பேராசிரியர் விருது மிசா எஸ். அகமது தம்பி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் கழக இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் மு.க. ஸ்டாலின் விருது, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் அவர்களின் நினைவாக வழங்கப்படும் முரசொலி செல்வம் விருது, பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளருமான பா. திருமாவேலன் அவர்களுக்கு வழங்கப்படும் என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

விருது பெறும் அனைவருக்கும் விழா மேடையில் முன்னாள் தமிழக முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b