Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 செப்டம்பர் (ஹி.ச)
சிறப்பு தண்டனைச் சட்டங்கள் அவற்றுக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்குள்ளேயே செயல்படுத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை பாகுபாட்டுடன் நடத்துவதாக உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்புச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது புகார் அளிப்பவர் மற்றும் எதிர் தரப்பு என இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியது.
சட்டத்திற்கு உண்மையாக இருப்பது என்பதே சமூக நீதிக்கு உண்மையாக இருப்பதாகும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். சிறப்பு பாதுகாப்புச் சட்டங்கள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. அவற்றை அதன் நோக்கத்திற்கு மாறாகவோ அல்லது உரிய ஆதாரங்கள் இன்றியோ பயன்படுத்தும்போது, அந்த சட்டத்தின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகிவிடும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
மேலும், குறிப்பிட்ட வழக்கில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறிவிட்டு, பின்னர் மீண்டும் பழைய மதத்திற்கே திரும்பிவிட்டார் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b