பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப்கார் சேவை செப்.22-ல் மீண்டும் தொடக்கம்
திண்டுக்கல், 20 செப்டம்பர் (ஹி.ச.) புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதனால், புரட்டாசி மாதத்தில் பழனிக்கு வருகை தரு
Palani Rope Car


திண்டுக்கல், 20 செப்டம்பர் (ஹி.ச.)

புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதனால், புரட்டாசி மாதத்தில் பழனிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ரோப்கார் சேவை பயனுள்ளதாக அமையும்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த ரோப்காரில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது அந்தப் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.

இதையடுத்து, செப்டம்பர் 22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வார விடுமுறை மற்றும் முக்கிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்படுவதன் மூலம் மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி ஏற்படும்.

குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நீண்ட நேரம் படிக்கட்டுகளில் ஏறுவதில் சிரமம் உள்ள பக்தர்களுக்கு இந்த சேவை உதவியாக இருக்கும்.

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிக்க உள்ள நிலையில், ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்படுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN